Breaking News

பின்தங்கிய பகுதி மக்களின் பணப்பரிமாற்றல்களுக்காக அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

டயலொக் கைபேசி இணைப்பு ஊடாக பின்தங்கிய பகுதி மக்கள் பணப்பரி மாற்றல்களை முன்னெடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு நிதி உதவி வழ 
ங்கியுள்ளதாக வடக்கு மாகாண முத லமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரி வித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய தூதுவர் பைரஸ் ஹட்ச்சனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையே இன்று (29) முற்பகல் சந்திப்பு நடை பெற்றுள்ளது.  இச்சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே முதல மைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள் கைபேசி ஊடாக பணப்பரிமாற்றல்களைச் செய்யும் வசதியை டய லொக் தொலைபேசி இணைப்பு நிறுவனத்துடன் இணைந்து அவுஸ்திரேலிய அரசு முன்னெடுத்துள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் இத் திட்டம் அறி முகப்படுத்தப்படுகிறது. அந்த இடங்களில் இச் சேவையைப் பெறுவதற்கான அலுவலகங்கள் நிறுவப்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் 200 இடங்களில் இச் சேவை அலுவ லகங்கள் அமைக்கப்படவுள்ளன. எ.ரி.எம் இயந்திரங்கள் ஊடாக பணத்தை மீளப்பெறுவது போன்றும் சி.டி.எம் இயந்திரங்கள் ஊடாகப் பணத்தை வைப்பில் இடுவது போன்றும் இவ் அலுவலகங்கள் மூலம் கைபேசி இணை ப்பின் ஊடாகப் பணத்தைப் பரிமாற்ற முடியுமென அவுஸ்திரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.