Breaking News

தமிழ் மக்களை கொன்றழித்தது தவறில்லையா? – சிவாஜிலிங்கம் கேள்வி!

தமிழ் மக்களை கொன்றது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தான் தவறா? 

புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கையென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரி வித்துள்ளார்.  தற்போது சர்ச்சையில் எழுந்துள்ள தேசியக்கொடி விவகாரம் தொடர்பாக இன்று (21.11) யாழில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்தி ப்பின் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், வடமாகாண அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுப்புத் தெரிவித்த விடயம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஓன்றுமில்லாத விடயத்தை பெரிய விடயமாக தென்னிலங்கை அரசியல்வா திகள் தெரிவிக்கின்றார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தா னிய ஆட்சியின் கீழ் இருந்தவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த வாரற பிரிட்டிஷிற்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

இவ்வாறான நிலமையில் தான் அரசியலமைப்பையும், தேசிய கொடியையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசியக் கொடியை அவமதிக்க வில்லை. தேசியக் கொடியை கீழே போட்டு மிதிக்கவில்லை. 

அவர் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ளார். அதை சர்ச்சையாக்கி, சட்ட நடவ டிக்கை எடுப்பதாக கூறுகின்றார்கள். அந்தச் சட்ட நடவடிக்கை என்ன என்பத னைப் பார்க்கலாம். 

அமெரிக்காவில் 50 மாநில அரசுகள் இருக்கின்ற இடத்தில் கூட ஆர்ப்பாட்ட க்காரர்கள் தேசிய கொடியை எரிப்பதற்கு உரிமை உள்ளதென அந்த நாடு ஏற்று க்கொண்டுள்ளது. தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறாக தெரிய வில்லை. தேசியக் கொடியை ஏற்ற மறுத்தது என்பது தான் தவறா? 

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு புதிய தேசிய கொடி அமைக்கப்பட வேண்டும். அது வரை இந்தச் சர்ச்சைகள் நீடிக்கும். 10 லட்சம் பேரின் குடியுரி மையை பறித்தீர்கள். 

தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தீர்கள். சிங்கள குடியேற்றங்களைச் செய்தீர்கள். அரசியலமைப்பின் மூலம் தொடர்ந்தும் எமது உரிமைகளைப் பறித்தீர்கள். ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க வேண்டும். 

சிங்கள மக்கள் இதைப் பிரச்சினையாக்கினார்களாக இருந்தால், இந்தப்பி ரச்சினை இன்னும் பெரிய பிரச்சினையாக மாறும். புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை என்றார்.