Breaking News

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் அவசர வேண்டுகோள் !

தற்போதைய பருவமழைக் காலத்தினால் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கி ன்றார்கள். 


மேலும்  டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தே, மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தின மும் அனுமதிக்கப்படுகின்றனர். மிகு ந்த நெருக்கடியான நிலையில் வை த்திய சேவையை வழங்க வேண்டி யுள்ளது.

எனவே பொதுமக்கள் நோயாளிக ளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயா ளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மகப்பே ற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் மாத்திரமே நிற்ப தற்கு அனுமதிக்கப்படுவர். 

குழந்தைகள் பிறக்கின்ற போது வைத்தியசா லைக்கு வருகைதந்து பார்வை யிடுவதை இயன்றவரை தவிர்த்து வீடு சென்ற பின்னர் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணி ப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.