Breaking News

புதிய – வரவு செலவுத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் !

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது. 
சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செல வுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வரு மாறு, வரவு – செலவுத் திட்ட சமர்ப்பி ப்பில் பங்கு ஏற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளு மன்றிற்கு வருகை தந்துள்ளனர்.  
  • நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை 
  • சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது 
  • 2018 ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெரு மையடைகின்றேன்: 
  • நிதியமைச்சர் மங்கள சமரவீர அரச வருமானம் 20 வீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு 
  • பொருளாதாரம் 20 வீதத்தால் அதிகரிக்கப்படும் அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதாரத்தில் தீர்க்கமானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்து ள்ளது. 
  • நீண்ட அபிவிருத்தித் திட்டம் அவசியம் : 
  • வணிக ரீதியில் ஸ்த்திரத்தன்மையை தக்கவைக்துக்கொள்ள போராட வேண்டியுள்ளது. 
  • இந்த வரவு – செலவு திட்டத்தின் மூலம் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கு வதே எமது பிரதான நோக்கமாகும். 
  • 2020 – 2040 இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களும் எரிபொருள் பயன்படுத்தப்படாத வாகனங்களாகக் கொள்ளப்படும். 
  • பணவீக்கத்தை 6 வீதத்துக்கு கீழ் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும். 
  • 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறை வடையும்.
  •  எதிர்வரும் காலங்களில் வரையறைகளுடன் வாகன இறக்குமதி : 
  • எயார் பாக் இல்லாத வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது. 
  • எதிர்வரும் காலங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை பெறல். 
  • சொகுசு வாகனங்களுக்கு 25 வீதம் வரி 
  • அதிகரிப்பு பிளாஸ்டிக் உற்பத்திக்கு 10 வீத வரி 
  • மின்சார முச்சக்கர வண்டி
  • மின்சார பஸ் இறக்குமதிக்கான வரி குறைப்பு. 
  • மீனவ, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் கல்கிஸை முதல் இரத்மலானை வரை.
  • கடற்கரையோரம் புனரமைப்பு பின்னவல யானைகள் சரணாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 2500 வலுக் கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு வரி.
  • டீசல் முச்சக்கர வண்டிகளுக்கு 50 ஆயிரம் ரூபா வரி அதிகரிப்பு கழி வுகளை அகற்ற 5 வருடம் சலுகை வழங்கப்படும். 
  • மனித வள அபிவிருத்திக்கு 75 மில்லியன் 3 வருடங்களில் எதிர்பார்ப்பு. 
  • மின்சார முச்சக்கர வண்டிகளுக்காக 90 வீத வரிச்சலுகை. 
  • பழைய முச்சக்கரவண்டி உரிமையாளர். 
  • பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு அவர்களின் வாகனங்ளை விற்பனை செய்ய வழிமுறை.
  •  காபன் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
  • திண்மக் கழிவு முகாமைக்கு 3000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வன விலங்குகளை பாதுகாக்க 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • நாட்டிலுள்ள களப்புகளை பாதுகாக்க மற்றும் புத்தாக்கம் செய்வதற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • முல்லைத்தீவு, நந்திக்கடல், நாயாறு உள்ளிட்ட 10 களப்புகளை அபிவி ருத்தி செய்ய நடவடிக்கை. 
  • நகர்ப்புறங்களில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை. 
  • புதிய பல்நோக்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க நடவடிக்கை. 
  • சுற்றுப்புறச் சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை. 
  • நானோ தொழில்நுட்பத்திற்கு சலுகை காலநிலைத் திணைக்களத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை. 
  • பசுமை திட்டத்தின் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் அமைக்கப்படும். 
  • கால்நடை வளர்ப்புக்கு 10 வீத வரிக் குறைப்பு மழைநீர் சேகரிப்பு திட்டம். 
  • குளங்கள் நிர்மாணத்திற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கடன் அட்டைகளுக்கான பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். 
  • தெரிவுசெய்யப்பட்ட விவசாய உபகரணங்கள் :
  •  தேசத்தை கட்டியெழுப்பும் வரிநீக்கம் 55 அடியைவிட நீண்ட படகு.
  • கொள்வனவுக்கு 50 வீத கடனை அரசாங்கம் வழங்கும் கையடக்கத் தொலைபேசி. 
  • கோபுரங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். 
  • சிறுதொழில் செய்பவர்களுக்கு விசேட வரிச் சலுகை. 
  • மீன் குளிரூட்டிக்காக 50 வீதம் அரசின் பங்களிப்பு. 
  • சுயதொழிலில் ஈடுபட விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும். 
  • சிறிய மற்றும் நடுத்தர வியாபாரக் கடன்களை பெறுவதற்கான எளிய நடைமுறை உருவாக்கப்படும். 
  • விவசாயிகளுக்கு கடன் வழங்க விசேட கடன் நடவடிக்கை. 
  • புதிய பிணை தொடர்பிலான கடன் அறிமுகம். 
  • கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வணிக திறன்களை மேம்படுத்த மேலும் சலுகைகள். 
  • இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கு புதிய அபிவிருத்தி வங்கி நிறுவப்படும். 
  • அரச தொழில்நுட்பத் துறைகளுக்கு 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • ஏற்றுமதி சந்தைக்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • விவசாய உபகரணங்களுக்கு வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • சிறிய மற்றும் நடுத்தர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை ஊக்கப்படுத்தல்.
  •  கறுவாப்பட்டை மற்றும் மிளகு உற்பத்தி அபிவிருத்திக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • சிறுதோட்ட தேயிலை உரிமையாளருக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
  • தென்னை உற்பதிக்கு விசேட வரிக் குறைப்பு.
  • மாணிக்கக் கல் பட்டை தீட்டுவதற்கு வரி நீக்கம். 
  • இலங்கையில் மாணிக்கக் கல் பட்டை தீட்டும் மையங்களை மேம்படுத்த நடவடிக்கை. 
  • கப்பல் நிறுவனங்கள் தொடர்பில் முதலீடு செய்ய சந்தர்ப்பங்கள் வழங்க ப்படும். 
  • நாட்டிலுள்ள தரமான நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும். 
  • ஜனாதிபதி பிரதேசம் என அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேலைத்திட்ட த்தினை மேலும் அபிவிருத்தி செய்ய 2200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • சுற்றுலாத் தலங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 
  • நானு ஓயா, கொழும்பு, எல்ல ரயில் சேவையை மேம்படுத்த நடவ டிக்கை. 
  • கறுவாத் தொழில் பயிற்சி பாடசாலை ஊக்குவிப்பு.
  • விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மேம்படுத்தப்படும்.
  •  குக்குளு கங்கையை அபிவிருத்தி செய்ய வரி விலக்கு வழங்கப்படும். 
  • ரோபோ தொழில்நுட்பத்திற்காக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • மாதுறு ஓயா, கல் ஓயா ஆகியவற்றில் விசேட சவாரி சேவையை மேம்படுத்தல். 
  • வாழைப்பழம் மற்றும் அன்னாசி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • நாட்டில் கோழிப் பண்ணைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 
  • மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகளை விரிவாக்குவதற்காக மொரட்டு வை பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு நிறுவனமொன்று அமைக்க ப்படும்.
  • வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டு காணிகளை வாங்குவதற்கு வரை யறை.
  • எதிர்வரும் 2025இல் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்குகளால் அதி கரிக்கப்படும். 
  • உள்நாட்டின் மலர் வர்த்தகத்தினை சர்வதேசம் வரை கொண்டு செல்ல தேசிய மலர்ச்சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய 10 பில்லியன் ரூபா முச்சக்கரவண்டி தொழில் முனைவோரை அதிகரிக்க நடவடிக்கை .
  • சகல மாணவர்களுக்கான உயர் கல்வி நடைமுறை அனைவருக்கும் தரம் 13 வரை கட்டாயக் கல்வி 
  • முச்சக்கரவண்டி சாரதிகளை சுற்றுலாப் பயண வழிகாட்டியாக்கும் வகையில் 
  • இலவச பயிற்சி மற்றும் சுற்றுலா சபையின் அனுமதியுடன் Tuk Tuk என ஸ்டிக்கர் ஒன்றினை காட்சிப்படுத்தி சுற்றுலா துறையில் இணை த்துக் கொள்ள நடவடிக்கை
  • 2500 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி வழங்கு வதற்கு நடவடிக்கை 
  • நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் ஒழுங்குமுறைப்ப டுத்த அதிகார சபையொன்று அமைக்கப்படும் 
  • மாணவர்களுக்கு “டெப்” வழக்கும் நடைமுறை மேலும் மேம்படுத்தப்ப டும் 
  • இளைஞர் கழகங்களுக்கு மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • தொழில் மற்றும் திறன் பயிற்சி சாலைகளை அமைக்க அதிக கவனம் 
  • நாட்டில் மேலும் 5 தொழில்பயிற்சி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை
  • இளைஞர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி 
  • பாடநெறி நாட்டில் கணக்கா ளர்களை உருவாக்க விசேட திட்டம் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் தொழில் நுட்பங்களை மேம்படுத்த நட வடிக்கை 
  • பாடசாலைகளில் ஸ்மார்ட் கல்வி அறைகள் ஸ்தாபிக்க 750 மில்லியன் ஒதுக்கீடு 
  • ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி மாணவர்களின் நலன்களை கருத்தி ற்கொண்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • விசேட தேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவ டிக்கைகளுக்காக வரி நிவாரணம் 
  • பல்கலைக்கழகங்களில் வைத்திய கல்வியை மேம்படுத்த 1250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • உயர் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை யாழ். பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா வளாகத்திற்கு புதிய நூலக வசதி நாட்டிலுள்ள தேசிய வைத்தியசாலைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை 
  • கணிதம் போன்ற பாடங்களுடன் அழகியல் பாடங்களை கற்க உயர் தர மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் 
  • சர்வதேச தரத்திற்கு விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும் 
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கான காப்புறுதி திட்டம் 
  • விளையாட்டு பயிற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம் 
  • மாத்தளை ஹொக்கி விளையாட்டரங்கை மேம்படுத்த 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • நாட்டில் பல சுகாதாரத் திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை 
  • நீரிழிவு வைத்தியசாலையை அமைக்க நடவடிக்கை 
  • தொற்று நோய்களை தடுப்பதற்கான விசேட நடவடிக்கை 
  • காலி, கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலையை மேலும் அபிவி ருத்தி செய்ய நடவடிக்கை 
  • சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கினை சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை 
  • குளிர் பானங்களில் சேர்க்கப்படும் சீனியின் அளிவிற்கு இன்று நள்ளிரவு முதல் விஷேட வரி ஒரு கிராமிற்கு 50 சதம் 
  • நாட்டிலுள்ள 100 கிராமப்புற விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை 
  • விளையாட்டுக்கு பயன்படுத்தும் பாதணிகளுக்கான வரி இன்று நள்ளிரவு முதல் குறைப்பு 
  • குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி கொழும்புத் துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை 
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபானங்களுக்கு NBT வரி விதிக்க தீர்மானம் 
  • பாலியல் நோய்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை 
  • லயன் வீடுகளில் வாழுவோருக்கு 25000 ஆயிரம் வீடுகள் ; 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 
  • சர்வதேச குற்றங்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் 500 மில்லியன் ரூபா செலவில் விஷேட பொலிஸ் பல்கலைக்கழகம் மத்திய அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கீடு 
  • கூட்டு வௌ்ளப்பெருக்கிற்கு கட்டுப்பாட்டு முறை குறைந்த வசதிகளைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை 
  • சைபர் கிரைம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும் பொலிஸ் சேவையை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு 
  • பஸ் பயணத்திற்காக ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அமுல் படுத்த நடவடிக்கை 
  • இரத்தினபுரி மற்றும் வெலிமடை நீதிமன்றங்களை பிறிதொரு ,இடத்தில் அமைக்க நடவடிக்கை 
  • நகர்ப்புற மறுவாழ்வு திட்டத்திற்காக 24,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • மீள் குடியேற்றத்திற்கு விசேட நிதி ஒதுக்கீடு 
  • எதிர்காலங்களில் இளவயது குற்றவாளிகள் மற்றும் பிரதிவாதிகள் வேறாக அழைத்துச் செல்லப்படுவர் 
  • ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்காக இந்நாட்டு இராணுவ சிப்பாய்களின் பாடநெறிக்காக 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணை செய்ய விசேட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நீதிமன்றம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • தொல்பொருள் இடங்கள் பாதுகாக்க நடவடிக்கை 
  • முன்னேஸ்வரம், அநுராதபுரம் உள்ளிட்ட மத வழிபாட்டு இடங்களில் யாத்திரிகர்களுக்கான ஓய்வறைகள் நிர்மாணிக்கப்படும் கலைஞர்க ளுக்கான விசேட திட்டம் 
  • அரச சேவையாளர்களுக்கு பொதுக்கொடுப்பனவு முறையொன்றை உருவாக்குதல் 
  • புராதன மத வழிபாட்டுத்தலங்ககை புனர்நிர்மாணம் செய்ய 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • தேசிய மதிப்பீட்டு கொள்கைகள் முறைமையை உருவாக்குதல் 
  • அரச பணியாளர்களுக்கான குழந்தை பராமரிப்பு மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை 
  • ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய உணவு காப்புறுதித் திட்டம் 
  • போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிற்கு 50 ஆயிரம் வீடுகள் 
  • தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒரு வருடத்திற்கு நீக்க யோசனை 
  • அரச வங்கிகளின் மூலதனச் சந்தைiய வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை 
  • வடக்கில் விசேட தேவையுடைய பெண்களுக்கு வீட்டுத் திட்டம் 
  • அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் வாகன சலுகையை தொடர்ந்தும் அமுல்படுத்த நடவடிக்கை 
  • யாழ்ப்பாணத்திற்கு நவீன பொருளாதார மையம் 
  • “அக்ரஹார காப்புறுதித் திட்டம்” 2016 இற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை 
  • காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலக பணிகளுக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • வடக்கில் விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
  • நேற்றையதினம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கபட்டன. 
  • குறிப்பாக பருப்பு, கருவாடு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எண்ணெய் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன 
  • கருவாட்டின் விலை 750 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
  • வங்கி நடவடிக்கைகளுக்கு 1000 ரூபாவுக்கு 20 வீதம் வரி 
  • எதிர்வரும் காலங்களில் சுருட்டு புகையிலை விற்பனை செய்வதற்கான அனுமதி பெறப்படல் வேண்டும் 
  • சட்டவிரோத மதுபான உற்பத்திகளுக்கு கடும் கலால் சட்டம் 
  • கடனை மீள செலுத்துவதற்கு 3 வருடத்திற்கு விசேட வரி 
  • சுங்க கட்டளைச்சட்டத்திற்காக புதிய கட்டமைப்பு குறுஞ்செய்திகளுக்கு விசேட வரி 
  • முகாமைத்துவ அமைப்பொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை 
  • சட்டவிரோத சிகரெட்டுக்களை தடுப்பதற்காக சிகரெட் இறக்குமதியின் போது அனுமதி பத்திரம் 
  • குறுஞ்செய்தி விளம்பரங்களுக்கு வரி 
  • திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி 
  • அமுல் 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் மோட்டார் வாகனங்களு க்கான கடன் வசதி இல்லை 
  • வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக வீடமைக்க 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 
  • வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற வீடமைப்பு நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க யோசனை 
  • மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பஸ் தொடர்பில் காபன் வரியை அறிமுகப்படுத்த யோசனை 
  • சர்வதேச பாதையில் நாட்டை அழைத்து செல்வதற்கு இது போன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
  • 2018 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தை தயாரிக்க உதவிய அனைவருக்கும் நன்றி. 
2018 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக நேற்யை தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, குறித்த வரவு- செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வாசிக்கப்பட்டமை தெரிவிக்கப்பெற்றுள்ளது.