Breaking News

தேசிய பாட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தி சாய்னா சாம்பியன்

தேசிய பாட்மிண்டன் இந்திய பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிந்துவை வீழ்த்தி சாய்னா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 82-வது நடக்கும் தேசிய சாம்பியன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்களு க்கான ஒற்றையர் பிரிவில் 11-வது இடத்தில் இருந்த சாய்னா, 2வது இடத்தில் இருந்த சிந்துவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் முதல் செட்டில் சாய்னா 21 - 17 என புள்ளிகளை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் இரண்டாவது செட்டில் இரு வருமே மாற்றி மாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக சென்றது. 53 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் இறுதியில் 27- 25 என்ற செட் கண க்கில் சிந்துவை வீழ்த்தி சாய்னா வெற்றி பெற்றார். 

 இதன் மூலம் சாய்னா பெரும் 3 வது கோப்பை இதுவாகும். இதற்கு முன்னதாக 2006, 2007-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பிரனாய், 21-15, 16-21, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.