Breaking News

வாள்வெட்டு குழுவை சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது!

ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பில் மறைந்திருந்த மூவர் நேற்று முன்தினம் கைது செய்யப்ப ட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் முன்னெ டுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்ப டையிலேயே நேற்றிரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கோண்டாவில், கொக்குவில் மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் 6 பேரும் விசாரணையில் உள்ளதாகவும் அவர்களால் வழங்கப்பபடும் தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய நபர்களை கைது செய்யவேண்டியுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.