Breaking News

மாவீரர் பிரதான சுடரை உரித்துடையோரே ஏற்ற வேண்டுமென – மூத்த போராளி காக்கா எச்சரிக்கை!

மாவீரர் நாளை தமிழ் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக கையாளக்கூடாது. என தமிழீழ விடுதலை புலி களின் மூத்த போராளிகளில் ஒருவரான மு.மனோகரன் (காக்கா அண்ணர்) தெரிவித்துள்ளார். 
எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெரு க்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுக ளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்க ளிப்பு அளப்பெரியது. 

தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழிச்சி யுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.

இந் நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியி னதும் தேர்தல் தேவைக்காக எவ்வழியிலும் கையாளக்கூடாதெனத் தெரி வித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து இறுதிக்காலம் வரையில் விடுதலைப்போராளியாக செயற்பட்ட காக்கா அவர்கள் ஈழவிடுத லைப்போராட்டத்தில்  தனது பிள்ளைகள் இருவரை ஈகம்செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.