சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்காக நல்லாட்சி போன்று அரசாம் – ஆனந்தன் எம்பி
“நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இர ண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கருஜயசூ ரிய தலைமையில் நேற்று நடை பெற்ற கலந்துரையாடலில் உரையா ற்றுகையிலேயே இவ்வாறு தெரிவி த்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகை யில்,
“இவ் வரவு – செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டு ள்ளன எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அரசமைப்பின் வழிநடத்தல் குழு வின் இடைக்கால அறிக்கையைப் போல, தெளிவில்லாமல் காணப்படு கின்றது.
வடக்குக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பதற்காக முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட அவை, வெறும் காகித ங்களாக அல்லது வெறும் பெயர்ப்பலகைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்த ப்பட்டதாக அமைந்துவிடக் கூடிய நிலையே காணப்படுகிறது” எனக் குறி ப்பிட்டுள்ளார்.
அவரது இக்கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்கு எதிரானதாக தென்படு கின்றது.
அக்கருத்தில் அவர், வரவு – செலவுத் திட்டத்தில், கூட்டமைப்பின் கருத்துகள் உள்வாங்கப்பட்டதாகத் தெரிவித்ததோடு, வரவு – செலவுத் திட்டம் குறித்து, திருப்தியான மனநிலையையே வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, அரசாங்கம் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “இன்று எமது மக்கள், எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.
பிரச்சினைகளைத் தீர்க்குமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரு கிறார்கள். அவர்களுக்கு உரிய தீர்வு நல்லாட்சியில் கிடைக்குமென்ற நம்பி க்கையில் தான், ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தார்கள்.
ஆனபோதும், அது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
“கேப்பாப்புலவு மக்கள், தமது பூர்வீக நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி, 200 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், கடந்த 8 மாதங்களாக நியாயம் கோரிப் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்னவாயிற்று? அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதற்கான பதிலைக்கூட சொல்ல முடியாத நிலைமையில், அரசாங்கம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து “தமது வாழ்நாளைச் சிறைச்சாலையில் கழித்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
அவர்களில் பலர் ஏன், எதற்காகக் கைது செய்யப்பட்டோம் என்பதைத் தெரியா மலேயே சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். .
“தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவது போல் நடிக்கும் அரசாங்கம், மக்கள் எதிர்நோக்கியி ருக்கும் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதில் பின்னிற்கிறது
“பலவீனமான தேசிய இனமொன்றை, பலம்மிக்க மற்றுமொரு தேசிய இனம், தமது பலத்தைப் பயன்படுத்தி அடக்குவதற்கு முயலுமானால், தர்மம் அதற்கு இடம் கொடுக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“தமிழ் மக்களுடைய பிரச்சினையில் அரசாங்கம், இதய சுத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்போம் என உறுதியளித்து, மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்களிடம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்பிரகாரம் தான் நாம் செயற்பட வேண்டும். அதனை மீறி நாம் செயற்பட முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னை வருத்தி தேசிய அரசாங்கத்துக்கு நிபந்தனைகளற்ற ஆதரவுகளை வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.