Breaking News

சுமந்திரனை மக்கள் மன்றுக்கு அழைக்கிறார் சட்டத்தரணி சுகாஸ்(காணொளி)

அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற
கூட்டமொன்றில் பேசிய சுமந்திரன் இடைக்கால அறிக்கை தொடர்பில் குறைசொல்லி பொய்ப்பிரச்சாரங்களை செய்பவர்கள் யாராவது நேரடி விவாதத்திற்கு தயாரா எனக் கேட்டிருந்தார்.

சுமந்திரனின் இந்த சவால் தொடர்பாக யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் அவர்கள் சுமந்திரனின் சவாலை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

சுமந்திரனுடன் மட்டுமல்ல கூட்டமைப்பில் எவருடனும் பகிரங்கமான விவாதத்திற்கு தயார். அதே நேரம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பில்லாமலும் ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் என இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு விவாத்த்திற்கு சுமந்திரன் வர தயாரானால் நாமும் தயாராகவே இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு எங்களுடன் விவாதத்திற்கு தயாரெனின் அதற்கான காலம், நேரம்,இடம் என்பவற்றை அவரே தீர்மானித்து அறிவிக்கும்படியும் சுகாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.