தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஒன்றே தீர்வு - முதலமைச்சர்!
சமஷ்டி அடிப்படை முறையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் என்பதில் நாம் தெளிவாகவே உள்ளோம் ஆனால் 'ஏக்கிய இராச்சிய' என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும், அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு போதாது, என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நட த்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ம் உரையாற்றுகையில்.. அரசு தம்மால் வழங்கக் கூடியதையே வழங்கத் தயாரா கியுள்ளது. நாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
பிரச்சினைகள் ஏற்பட்டத ற்கான காரணங்களுக்குரிய தீர்வையே வழங்க வேண்டும். வெறுமனே அதற்கு மேல் வழங்க முடியாது, இதற்கு கீழ் தரமுடியாது எனக் கூறிக்கொண்டிரு ந்தால் பிரச்சினைக்கான தீர்வைக் காணமுடியாது.
அரசுதான் எமது உரி மைகளைப் பறித்தது. அவற்றைத் திருப்பித் தருவதும் அரசின் கடப்பாடாகும்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு எது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ் மக்களுக்கு போதியளவான உரிமைகளை கொடுக்கலாம்.
ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் நடந்தாலும் பெரும்பாண்மை மக்களின் அதிகாரம் மேலோங்கி நிற்கும்.
தருபவற்றை ஏதோ ஒரு காரணத்துக்காக மீளப் பெறுவதற்கு ஒற்றையாட்சி அதிகாரப் பகிர்வு வழிவகுக்கும்' என முத லமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.