40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடனான கப்பல் இலங்கையை அடைந்துள்ளது !
40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய வொஸ்கா லேடி என்ற கப்பல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இரவு இல ங்கையை அடைந்துள்ளது.
சப்புகஸ்கந்த எரிபொருள் களஞ்சிய சாலையை குறித்த கப்பல் அடைந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதி லிருந்து எரிபொருளை வெளியே ற்றும் நடவடிக்கைகள் இன்று முற்ப கல் 11 மணிக்கு ஆரம்பமாகுமென கனியவள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்பரிசோதனைக்கு உள்ளாக்குவதெனத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று பிற்பகலுக்குப் பின்னர் அதில் இருந்து எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்கப்படு மென தெரிவிக்கப்பெற்றுள்ளது.