வங்கக் கடலில் தாழமுக்கம்; வடகிழக்கில் மழை தொடரும் !
ஸ்ரீலங்காவின் வடகிழக்கை அண்மித்த வங்காள விரிகுடாவுக்கு தென்மேற்கே தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்து ள்ளது.
வடக்கு கிழக்கில் நிலவும் இடியுடன் கூடிய மழைக் காலநிலை தொடர்ந்து நீடிக்கும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடி யுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். எதிர்வரும் நாட்களிலும், வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படு மென அந்த திணைக்களம் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க ப்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும்.
இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும்.
சீரற்ற காலநிலையின் காரணமாக பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.