Breaking News

கேப்பாபுலவு காணி தொடர்பாக மைத்திரி, ரணிலுக்கு அவசர கடிதம் - சம்பந்தன்!

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ள்ள கேப்பாபுலவு மக்களுக்குச் சொ ந்தமான 73 ஏக்கர் காணிகளை வாக்கு றுதி வழங்கியதன் பிரகாரம் மக்களி டமே வழங்குவதற்கு உடன் நடவடி க்கைகளை முன்னெடுக்க வேண்டு மென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன, பிரதம ரணில் விக்கி ரமசிங்க ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் சமர்ப்பித்துள்ளார். காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக கேப்பாபுலவு மக்கள் எடுத்துவரும் துணிச்சலான உறுதிப்பாட்டின் அடிப்படையில், காணி களை மீளப்பெறும் சட்ட பூர்வமான அவர்களது உரிமையை மறுப்பது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதில் பாரிய தடக்கல் ஏற்படும். 

இன நல்லிணக்கத்துக்குப் பாரியளவில் பொதுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என இக்கடிதத்தின் பிரதிகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.