Breaking News

தமிழரசுக்கட்சிக்குத் தாவிய - ரவிகரன்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லை த்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலை யில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக பகிரங்கப்படுத்த ப்பட்டுள்ளது.  

வடமாகாண சபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரை ராசா ரவிகரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் ஜன நாயக முன்னணி தமது கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட வழங்கிய சந்தர்ப்பத்தின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றி ருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, மாற்றுத் தலைமை கோரி வரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வ ரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளதோடு, 

கஜேந்திரகுமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியே போட்டி யிடப்போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து, புதிய முன்னணியின் உரு வாக்கச் செயற்பாட்டுல்  தீவிரமாகவுள்ளார்.  

இந்நிலையில், அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை, தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உறுப்பினர், ஒரு நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின்பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிட த்தில் உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, விதிப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.