Breaking News

வடக்கு முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த - சுமித்திரன்!

இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்கு எது­வும் இல்லையெனக் கூறும் முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும் சரி, அமைச்­சர்­க­ளாக இருந்­தா­லும் சரி அல்­லது தேசி­யக் கொடியை ஏற்ற முடி­யாதென போலித் தேசி­யம் பேசு­ப­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி அவர்­க­ளு­டன் நான் விவா­திக்­கத் தயாராக உள்ளேன். விவா­திக்க வரு­ப­வர்­கள் இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யா­கப் படித்­து­விட்டு முன்வர­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அக்கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மாகிய எம்.ஏ.சுமித்­தி­ரன் அறிக்கை விடுத்துள்ளார். மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அஸ்லி நிம­லன் சௌத்­த­ர­நா­ய­கத்­தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்­று­ முன்­தி­னம் இடம்பெற்­ற இந்நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார். 

 மேலும் தெரி­விக்கையில்,...

கூட்­டாட்­சியை (சமஷ்டி) முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர்­கள் சிங்­க­ள­வர்­கள். இதை முத­லில் பிரிட்­டி­ஷா­ரி­டம் பரிந்­துரைத்­த­வர்­கள் கண்­டி­யச் சிங்­க­ள­வர்­கள். அத­னால் கூட்­டாட்­சி­யைச் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­னதென எவ­ரும் கூற­மு­டி­யாது. 

இவ் விட­யங்­களை அவர்­கள் பயப்­ப­டா­மல் இருக்­கும் வகை­யில் கூற­வேண்­டும். ஒரு நாட்­டின் அர­ச­மைப்பு மக்­கள் பார்த்­துப் பயப்­ப­டும் ஒன்­றாக இருக்­கக் கூடாது. 

சொற்­க­ளைக் கண்டு பயந்­தால் அந்­தச் செற்­க­ளைத் தள்ளி வைத்­து­விட்டு உள்­ள­டக்­கங்­க­ளைப் பார்க்­க­வேண்­டும். 70 ஆண்­டு­க­ளாக எமது மக்­க­ளின் வேண­வாக்­க­ளாக இருந்த, எங்­களை எமது மாநி­லத்­தில் ஆட்சி செய்­கின்ற அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா? என பார்க்க வேண்­டும். 

சொற்­களை வைத்து போலித் தேசிய வாதம் பேசா­தீர்­கள். அனைத்து நாடா­ளு­மன்­றச் சட்­டங்­க­ளும் மாகா­ண­சபை நிய­திச் சட்­டங்­க­ளும் துணை ­நிலை சட்­ட­வாக்­கங்­க­ளும் சிங்­க­ளத்­தி­லும் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் இயற்­றப்­ப­டு­தல் வேண்­டும் என உப­குழு அறிக்­கை­யிலே தெளி­வா­கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிய அர­ச­மைப்­பிலே சிங்­க­ளம் மேலோங்­கும் என எங்­கும் சொல்­லப்­ப­ட­வில்லை. மூன்று மொழி­க­ளுக்­கும் சம அங்­கீ­கா­ரம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. மக்­க­ளின் அடிப்­படை விட­யங்­கள் இடைக்­கால அறிக்­கை­யில் மறுக்­கப்­பட்­டுள்­ளது என்று எவ­ரா­லும் கூற முடி­யாது. 

நாங்­கள் தற்­போது அரை­வா­சித் தூரம்­தான் வந்­துள்­ளோம். இது சரி­வ­ரும்; சரி­வ­ரா­ம­லும் போய்­வி­ட­லாம். சரி­வ­ரா­மல் போய்­வி­டுமோ என்ற பயத்­தி­னாலே இப்­போதே வெளி­வா­ருங்­கள் எனக் கூறும் மூடன் யார்? 

மூடத்­த­ன­மாக மக்­க­ளைத் தேவை­யில்­லாது உசுப்­பேத்தி அவர்­க­ளுக்­குள்ளே வீணா­கப் பீதியை உரு­வாக்கி இது­வரை நாங்­கள் இழந்த இழப்­பு­க­ளுக்கு மாற்­றீ­டாக ஓர் அர­சி­யல் தீர்வு கிடைக்­கும் வாய்ப்பை நாங்­களே மழுங்­க­டித்து எங்­கள் தலை­யில் நாங்­களே மண்­ணைப் போட வேண்­டுமென்பவர்களை  மக்­கள் நிரா­க­ரிக்க வேண்­டும் எனத் தெரிவித்துள்ளார்.