புலிகளின் தங்கத்தை தேடி தேடுதல் வேட்டை முல்லைத்தீவில் !
இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதை க்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் என்பனவற்றினைத் தேடி நேற்றைய தினம் முல்லைத்தீவில் அகழ்வு நடவடிக்கையினை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில்....
முல்லைத்தீவு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டு மைதானத்திலேயே இந்த அகழ்வு பணிகள் முன்னேடுக்கபட்டுள்ளது. அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். எம். எஸ். சம்சுதீன் முன்னிலையில் இவ் அகழ்வு நடவடிக்கை காலை 10 மணியளவில் இடம்பெ ற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் நூற்றுக்கணக்கான கிலோகிராம் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு நடைபெற்ற அகழ்வு நடவடிக்கையில் எந்தவித பொருட்களும் மீட்கப்பட வில்லை.
இதனையடுத்து அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறு த்தபட்டது.