மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் அனுஷ்டிக்க ஏற்பாடு.!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்குகிழக்கு பகுதியெங்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்பது மாவீரர் துயிலுமில்லங்களில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைவிட கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளிலும் 13 மாவீரர் துயிலும் இலலங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள்,மக்கள், என பலதரப்பட்டவர்களாலும் ஒவ்வொரு துயிலுமில்லகளிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரமாக் முன்னெடுக்கபட்டது.
அனைத்து துயிலுமில்லங்களும் இராணுவத்தால் இடித்தளிக்கபட்டுள்ள நிலையிலும் சில மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ள போதிலும் மக்கள் துப்பரவாக்கல் பணிகளை மேற்கொண்டு மாவீரர் நாளை உணர்வெளிச்சியுடன் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் துயிலுமில்லம் , மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம், அலம்பில் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம், தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், களிக்காடு கோடா லிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இடங்களில் மாவீரர் நாள் நினை வேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக ஈடேறவுள்ளது.
யாழில் உடுத்துறை, திருவில், சாட்டி, கிளிநொச்சியில் கனகபுரம், முழங்கா வில், மன்னார் ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான், வவுனியா ஈச்சங்குளம் போன்ற மாவீர் துயிலுமில்லங்களிலும் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இதனைவிட யாழ்.பல்கலைகழகத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்து வதற்கு ஒழங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளா கம் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் நாளைக் குறிக்கும் வகையிலான பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் உடுத்துறையில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வில் முதலாவது சுடரினை நான்கு போராளிகளை பெற்றெடுத்த கந்தசாமி ஈஸ்வரியம்மாள் எற்ற வுள்ளார்.
அதேபோன்று இன்று காலை பத்து மணிக்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான அணியினர் யாழ்.நல்லூரில் உள்ள திலீப னது நினைவிடத்தில் சுடரேற்றி அங்கிருந்து இராணுவத்தின் கட்டுப்பாடுகளி லுள்ள மாவீரர் துயிலுமில்லங்களான கோப்பாய், கொடிகாமம், எல்லாங்குளம் ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிற்கும் சென்று அங்கு இராணுவ முகாம்க ளுக்கு முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு தொண்டமனாறு கடலில் மாவீரர்தின நிகழ்வுகள் நடாத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகள் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடரேற்றல் நிகழ்வுகள் ஈடேறவுள்ளன.
இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படவுள்ளதாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரபாகரனின் பிறந்தநாள் அனுஷ்டிப்பு
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினமான நேற்று வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீடு அமைந்திருந்த இடத்தில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
இதேபோன்று காலை 10 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் பிரபாகரனது வீட்டு வளவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்திலும் பிரபாகரனது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன் மாண வர்களால் கேக் வெட்டப்பட்டு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.