Breaking News

மழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி க்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி இன்றைய 3 ஆவது நாள் ஆட்ட த்தின் போது அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.மழை­யினால் இந்­திய அணி காப்­பாற்­றப்­ப­டு­கி­றது என்றே சொல்ல வேண்­டி­யுள்­ளது. 

காரணம் நேற்றும் போட்டி ஆரம்­ப­மாகி சிறிது நேரத்தில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து இந்­திய அணி திணற மழை குறுக்­கிட்டு போட்­டியை நிறுத்­தி­ விட்­டது. முதல் நாளில் சுரங்க லக்மால் வேகத்தில் மிரட்­டி­ய­து­போல நேற்­றைய போட்­டியில் தசுன் சானக்க அசத்­தினார். 

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் கொல்­கத்­தாவில் நடை­பெற்று வரும் டெஸ்ட் போட்­டியின் நேற்­றைய 2ஆ-வது நாள் ஆட்­டத்தின் பெரும்­ப­கு­தியும் மழையால் தடை­ப்பட்­டது. 21 ஓவர்­களே வீசப்­பட்­டன. 

நேற்­று­முன்­தினம் தொடங்­கிய இந்த போட்­டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று களத்­த­டுப்பை தேர்வு செய்தார். மழைக்­கா­ர­ண­மாக மதியம் 1.30 மணிக்­குத்தான் ஆட்டம் தொடங்­கி­யது, இலங்கை வேகப்­பந்து வீச்­சாளர் லக்­மாலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோஹ்லி (0) ஆகி­யோரை வீழ்த்தி அசத்­தினார். இதனால் இந்­திய அணி 11.5 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 17 ஓட்­டங்­களை எடுத்­தி­ருக்­கும்­போது மீண்டும் மழை குறுக்­கிட்­டது. 

இதனால் முதல் நாள் ஆட்டம் அத்­துடன் முடித்­து­வைக்­கப்­பட்­டது, புஜாரா, ரஹானே களத்தில் இருந்­தனர். சுரங்க லக்மால் 6 ஓவர்­களில் ஓட்­ட­மேதும் விட்­டுக்­கொ­டுக்­காமல் 3 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். இதைத் தொடர்ந்து நேற்று இரண்­டா­வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. 

காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்­டிய போட்டி 15 நிமிடம் முன்­ன­தாக 9.15-க்கே தொடங்­கி­யது. நேற்றைய போட்­டியில் 98 ஓவர்கள் வீச முடிவு செய்­யப்­பட்­டது. புஜாரா, ரஹானே ஆட்­டத்தை தொடர்ந்­தனர். 

ரஹானே 4 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்­டங்­க­ளுடன் பெவி­லியன் திரும்­பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்­தாலும் மறு­மு­னையில் புஜாரா நம்­பிக்­கை­யுடன் விளை­யா­டினார். 6ஆ-வது விக்­கெட்­டுக்கு புஜா­ரா­வுடன் சஹா ஜோடி சேர்ந்தார். 

இந்­தியா 32.5 ஓவர்­களில் 74 ஓட்­டங்கள் எடுத்­தி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டது. இதனால் ஆட்டம் நிறுத்­தப்­பட்டு உணவு இடை­வேளை விடப்­பட்­டது. அதன்­பின்பும் மழை தொடர்ந்து பெய்­தது. 

பின்னர் மழை விட்­டாலும் பவுண்­டரி லைன் அருகே ஈரப்­பதம் அதி­க­மாக இருந்­ததால் 2ஆ-வது நாள் ஆட்டம் அத்­துடன் முடித்துக் கொள்­ளப்­பட்­டது. 2ஆ-வது நாளில்­இந்­தியா 21 ஓவர்கள் மட்­டுமே விளை­யா­டி­யது. 

புஜாரா (47), சஹா (6) களத்தில் உள்­ளனர். லக்மால் 11 ஓவர்கள் வீசி 5 ஓட்­டங்கள் விட்­டுக்­கொ­டுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசியுள்ளார். 

நேற்றைய இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கையின் மற் றொரு வேகப்பந்து வீச்சாளரான தசுன் சானக்க வீழ்த்தினார். இந்நிலையில் 75 ஓட்டங்களுடன் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மிகுதி 5 விக்கெட்டுகளையும் 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் இழந்து 172 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக புஜாரா மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.