பல்கலைக்கழகம் ஆரம்பம் போராட்டம் தொடரும் – யாழ்.மாணவர்கள் தகவல் !

இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்து வழங்கிய வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் திங்கட்கிழமை கற்றல் நடவடிக்கைகள் மீள தொடங்கவுள்ளன.
இந்நிலையில், கல்வி நடவடிக்கைக்குப் பாதிப்பில்லாது, அரசியல் கைதி ளு க்காகப் போராடுவோம்.
“அரசியல் கைதிகள் போராட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். இந்நிலையில், தற்போது மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக மக்கள் மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கி ன்றனர்.
இப் போராட்டம், மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற வேண்டும். அரசியல் கைதிகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். அரசியல்வாதிகளும் உங்கள் வேற்றுமையைக் களைந்து ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.
“யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர்களை நல்ல எண்ண அடிப்படையில் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
“மே லும், திங்கட்கிழமை மீள பீடங்கள் திறக்கப்பட்ட பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடி, போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னெடுக்க உள்ளோம்” என்றார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பலவாறான கோரிக்கைகளை முன்வைத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணத்தால், அப்பல்கலைக்கழகம் மறு அறி வித்தல் வரையிலும் நடைமுறையற்று காணப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி நிலையில் உள்ளதனால் தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ள மாணவர்கள், எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக, தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறும் பல்கலை க்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.