Breaking News

அமெரிக்க ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் கலந்து ரையாடலில் ஈடுபட்டுள்ளார். குறித்த கல ந்துரையாடல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றது. 

ஆசியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்  கொண்டுள்ள ட்ரம்ப், முதற் பகுதியாக ஜப்பானுக்கும், அதன் பின்னர் தென்கொரி யாவுக்கும் தனது விஜயத்தை மேற்கொ ண்டுள்ளார். 
இந் நிலையில் நேற்று அவர் சீனா நோக்கிய பயணத்தை முன்னெடுத்த அமெ ரிக்க ஜனாதிபதியின் இவ் விஜயத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து சீன ஜனாதிபதியுட னான சந்திப்பு மற்றும் கலந்துரையா டலும் இடம்பெற்றவேளை  வடகொ ரிய நெருக்கடி மற்றும் இரு நாடுகளு க்குமிடையிலான உறவுகள் குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் கிடை த்துள்ளன. 

இச் சந்திப்பின் பின்னர், சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளதாக சீன துணை பிரதமர் வாங் யங் குறிப்பிட்டுள்ளார். 

வர்த்தகம், பொருளாதார துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உற வுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனப்பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் வியட்நாம் செல்ல உள்ளதுடன், அங்கு நடைபெறும் ஆசிய பொருளாதார உச்சிமாநாட்டிலும் பங்கேற்க வுள்ளார். இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீனும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.