யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதுவராக நடிகை த்ரிஷா நியமனம்!
யூனிசெஃப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் உரிமை க்கான நல்லெண்ண தூதராக பிரபல நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டு ள்ளார்.
இன்று யூனிசெஃப்பின் சர்வதேச குழ ந்தைகள் தினவிழா இடம்பெற்ற வேளை உலகிலேயே 5 வயதுக்கு உட்ப ட்ட அதிகமான குழந்தைகளை, இந்தியா கொண்டுள்ளது. ஆனால் இதுவரை அக்குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து முறையாக வழங்கப்படவில்லை யெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 80 மற்றும் 90களில் தடுப்பு மருந்துகள் வழங்கும் முறையில் இந்தியா சிற ப்பாக நடைபெற்றது.
ஆனால் அதற்கு பின்னர் முறையாக வழங்கப்படவில்லை என யூனிசெப் அலுவலர் கியானி முர்ஸி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய யூனிசெஃப் தலைவர் ஜோப் சக்காரியா தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை போன்றவை குறித்த விழிப்புணர்விற்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.