Breaking News

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியினர் இணைந்திடினும் மக்கள் இணையப்போவதில்லை - மகிந்த

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியின் அர சியல் உறுப்பினர்கள் இணைந்த போதிலும் மக்கள் ஒரு போதும் இணைந்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்‌ஷ தெரிவித்துள்ளார். குணசிங்கு புர புர்வாராம விகாரையில் நேற்று இரவு நடைபெற்ற மத நிகழ்வொ ன்றின் பின் ஊடகங்களிடம் கருத்து வழங்கிய சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறான ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். 

தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லையெனத் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்பொழுது பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ள தாகவும், இதனூடாக மக்களுக்கு மிகவும் இக்கட்டான நிலை தோன்றியிருப்ப தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.