Breaking News

வறுமையை அகற்றுவதற்கு கூட்டு முயற்சி தேவை – விவசாய அமைச்சர் க.சிவநேசன்

பொருளாதார ரீதியாக நன்மை அடையக்கூடிய திட்டங்களை வகுத்து, நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து, வடமாகாணத்தின் பொருளதார அபிவிருத்தியின் ஊடாக வறுமையை நீக்குவதற்காக கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் விவரித்துள்ளார்.  

வடமாகாண சபையின் 113ஆவது அம ர்வு கைதடியில் அமைந்துள்ள பேர வைச் செயலகத்தில் அவைத் தலை வர் சீ.வி.கே.சிவஞானம் தலைமை யில் நேற்று நடைபெற்றபோது, 2018 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்தி ட்ட விவாதத்தில் கலந்து உரையா ற்றுகையிலே​யே ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   

மேலும் தெரிவிக்கையில், 

“2018ஆம் ஆண்டு மீண்டுவரும் செலவீனத்துக்காக 880.80 மில்லியன் ரூபாவும் மூலதனச் செலவீனத்துக்காக 473.50 மில்லியன் ரூபாவும் எமது அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “வட மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது, வறுமை கூடிய மாகாணமாக உள்ளது. 

வறுமையைத் ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு எம் அனைவரையும் சார்ந்ததாகும். மக்களின் வாழ்வாதார திட்டங்களை மேம்படுத்தக் கூடிய துறைகளான விவசாயம், கால்நடை வள ர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் எமது அமைச்சின் நிர்வா கப் பரப்பினுள் உள்ளன. 

“பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுத்து நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்து பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களை உருவாக்க முடியும். “உள்நாட்டு சந்தை வாய்ப்பு வசதிகள் மட்டு மன்றி வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் வேண்டும். 

“வாழ்வாதார உற்பத்தி செயற்பாடுகளின் போது அரச மற்றும் தனியார் பங்க ளிப்பு மற்றும் முயற்சியாண்மையாளர் பங்களிப்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதுடன், அமைச்சினூடாக உருவாக்கப்பட்டு வரும் விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம், சுற்றாடல் மற்றும் மீன்பிடி தொடர்பான நியதிச் சட்ட ங்கள் மூலம் துறை சார்ந்த கட்டமைப்புக்களை உருவாக்கி சட்ட ரீதியாக நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்தி, எமது மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. 

“மேலும், எமது மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான எம்மிடமுள்ள வளங்கள் பலவற்றை நாம் இன்னும் இனங்காண வேண்டியுள்ளது. அவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வருமான வழி வகைகளையும் உரிய ஆக்க பூர்வமான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய தேவையும் காணப்படு கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.