Breaking News

மக்களின் உரிமைகளை தம்வசம் வைத்துள்ள தலைமைகள் - ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

தமிழர்கள் தற்பொழுது அழிக்கப்பட்டு அடக்கப்பட்டு வருவதாக தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசக்கரி தெரிவித்து ள்ளார். 

இதற்கு சில தமிழ்த் தலைவர்கள் மிக முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.  அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் எவ்வாறு பிரதமர் தலையிட முடியுமென கேள்வி எழு ப்பியுள்ள ஆனந்த சங்கரி, அவ்வாறா யின் சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றோர் அரசியலில் பங்கேற்ற வேண்டிய தேவையி ல்லையெனவும் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் உள்ளளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்ப ணத்தை தமிழர் விடுதலை கூட்டணி நேற்றைய தினம் செலுத்தியுள்ளது. கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சி சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. 

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வீ.ஆனந்த சங்கரி, மக்க ளின் உரிமைகளை தமிழ் தலைவர்கள் தமது கைகளில் வைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.