பன்மைத்துவ சூழல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மீலாதுன் நபி வாழ்த்துவதில் - ஜனாதிபதி
இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விள ங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக வும் அமைந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும்,
பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார விழாக்களின் ஊடாக தமது சக வாழ்வை வெளிக்காட்டியுள்ளது. அரச அனுசரணையுடன் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் இலங்கை சமூகத்தில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லுறவையும் உறுதிப்படுத்துகின்றன.
மூன்று தசாப்தகால கொடிய யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனை த்து சமூகங்களும் ஒரு தாய் மக்களைப் போல ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் முன்மாதிரியான ஒரு தேசமாக சுபிட்சத்தை நோக்கிச் செல்வதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. உலகின் அனைத்து சமயங்களும் போதிக்கும் அன்பு, கருணை மற்றும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இவ்வருட தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறுதல் மிகச் சிறப்பானதாகும்.
இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் என்பவ ற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல முஸ்லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.