Breaking News

ஐ.தே.கட்சியினால் சாவகச்சேரி நகர சபையில் போட்டிக்காக வேட்புமனு தாக்கல்!

ஐக்கிய தேசிய கட்சி யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டி யிடுவதற்காக வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை (14) தாக்கல் செய்யப்ப ட்டுள்ளது. 

ஐக்கியதேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்ச ருமான திருமதி விஜயகலா மகே ஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி யின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பா ளர், வேட்பாளர்கள் ஆகியோர் இணை ந்து இன்று காலை யாழ் மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரிடம் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்து ள்ளனர்.  இதேவேளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக இன்றைய நாள் காணப்படுகின்றமையால் யாழ் மாவட்ட செயலகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் ஆகியன வேட்பு மனுவை கையளிக்கவுள்ள நிலையில் அசம்பா விதங்கள் குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.