Breaking News

ஐ.தே.க.வின் விசேட மாநாடு ஜனவரி 6ம் திகதி - கொழும்பில் நடாத்த திட்டம் !

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் யானை சின்­னத்தில் போட்­டி­யி­ட­வு ள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் கலந்துரையாட லாக அனைத்து பங்­காளி கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஜன­வரி 6 ஆம் திகதி விசேட மாநா­டொன்றை கொழும்பில் நடத்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் நேற்றைய ­தினம் தீர்மா னம் நிறைவெய்தியுள்ளது.  பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசி யக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் செயற்­குழு கலந்துரையாடல் ஆரம்பமாகியது. 

இக் கலந்துரையாடலின் போதே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொட ர்பில் மேலும் தெரி­விக்கையில் ,உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­ம் இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி வேட்­பா­ளர்­களை அறி­வு­றுத்­து­வது தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. தற்­போது 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்டு விட்­டன. 

இதன்­படி அடுத்த வாரம் ஏனைய உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. மேலும் இத் தேர்­தலில் யானை சின்­னத்தில் போட்­டி­யி­டவே திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

இதன் ­பி­ர­காரம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் யானைச் சின்­னத்தில் போட்­டி­ யி­ட­வுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்ட மாக அனைத்து பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனவரி 6 ஆம் திகதி விசேட மாநாடொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.