Breaking News

ஆசனப்பங்கீடு தொடர்பான உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறியதாக குற்றச்சாட்டு !

உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சுமத்தி யுள்ளார். 

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இட ம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சித் தலை வர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணை ந்து அண்மையில் கொழும்பில் சந்தி த்து கலந்துரையாடியிருந்தனர்.  கலந்துரையாடலின் இறுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வ தாகவும் தெரிவித்திருந்தனர். 

அன்றைய கலந்துரையாடலில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாட ப்பட்டிருந்தது. குறிப்பாக அதில் வலிமேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வரு டங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வரு டம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இண க்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.  

இந் நிலையில் நேற்றைய தினம் இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதில் தமிழரசுக்கட்சி வலிமேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடு த்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாதெனவும், தமிழருசுக்கட்சி யின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர். 

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்து ரையாடப்பட்ட போது இணக்கம் தெரிவித்திருந்தனர். 

பின்பு தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்து விட்டனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.