Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்களுக்கு சிறை விதிப்பு !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேருக்கு 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப் வாகனமொன்றை இலக்கு வைத்து 2006 ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் மரு த்துவர் உட்பட ஏழுபேர் கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்க ளின் கீழ் சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமது குற்றத்தை இவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  தண்டிக்கப்பட்டவர்கள் மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.