Breaking News

சர்வதேசம் இன்றி அரசாங்கம் புலிகளின் போராட்டத்தை வீழ்த்தியிருக்க முடியாது!

சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஸ்ரீலங்கா அரசாங்கம் இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியாதென வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்மைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப டுவதாக கூறுவது உண்மைக்கு புற ம்பானதெனத் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்  பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு உடையார்கட்டு மூங்கிலாறு பகுதி யில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமா காண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தமிழ் மக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்க ளின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அத்துடன் ஸ்ரீலங்காவின் பிரதான கட்சிகள் இரண்டுமே தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறி விட்டதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.