Breaking News

தமிழரசு கட்சி மண்வெட்டி வீரர்கள் பிணையில் விடுதலை(காணொளி)

கிளி பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக்
கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு மண்வெட்டிகொண்டு துரத்திய தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவர் ஈடுப்பட்டிருந்தார். அதன்போது அலுவலகத்திற்கு மண்வெட்டியுடன் உள்நுழைந்து அவரைத் தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரையே கிளிநொச்சி நீதவான் நீதின்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலைசெய்தது.

குறித்த தாக்குதல் முயற்சி தொடர்பாக ஏற்கனவே தமிழ்கிங்டொம் மாத்திரம் செய்தி வெளியிட்டிருந்தது.  ஏனைய உள்ளூர் ஊடகங்கள் எதிலும் இது வராமல் பார்த்துக்கொண்டது தமிழரசு கட்சி.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பிரமந்தனாறு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்வும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச் மாதம் ஒத்தி வைத்துள்ளது.

இது தொடர்புடைய முன்னைய செய்தி