உண்மையான அதிகாரப் பகிர்வு இன்றி உரித்துக்களை மீளப் பெற முடியாது – முதலமைச்சர்!
ஒரு முறையான சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகி ர்வு பெற்றாலேயே அன்றி நாம் எமது பறி கொடுக்கப்பட்ட உரித்துக்களை மீண்டும் பெற முடியாது. ஆகவே பெப்ரவரி 4ஆம் திகதியை எவ்வாறு தமி ழர்களாகிய நாங்கள் கொண்டாட முடியும்?
இவ் விடயம் தொடர்பாக எனது இணைத்தலைவர்களுடன் பேசும் வாய்ப்பு என க்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகின்றேன். காரணம் தமிழர்கள் அனை வரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்றே நாம் திடமாக நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.