Breaking News

தேர்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 10ஆம் திகதி, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசா லைகளும் மூடப்படும் என்று கல்வி அமை ச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் அனை த்தும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்ப டுத்தப்படவுள்ளதாலும், பெரும்பாலான பாட சாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாலுமே, வரும் வெள்ளிக்கிழமை பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, 19 பாடசாலைகளும், இரண்டு கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலுக்கான மத்திய நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் முன்னாயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், 19 பாடசாலைகளும், 2 கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் மூடப்படுமெனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.  

இன்று மூடப்படும் பாடசாலைகளில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மட்ட க்களப்பு இந்துக் கல்லூரி, திருகோணமலை விபுலானந்த வித்தியாலயம் ஆகி யனவும் உள்ளடக்கியுள்ளன.