Breaking News

பிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலையான நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவித்துள்ளன. 
உடலின் பல பாகங்களிலும் வெட்ட ப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்ப ட்ட இளைஞர் 25 வயது மதிக்கத்தக்க வரென தெரிவிக்கப்படுகின்றது. பாரி ஸ் நகரில் அமைந்துள்ள உணவக மொன்றில் கடமையாற்றிவந்த குறி த்த இளைஞர் அவ் உணவகத்தின் நில க்கீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படு வதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிபுரியும் அவரது 34 வயதுடைய நண்பரென தெரியவந்துள்ளது. 

 சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்டமை க்கான காரணம் தெரியவராத போதிலும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாவர்.