Breaking News

சாவகச்சேரி, பருத்துறை நகர சபைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வசம்.!

நடைபெற்று முடிவடைந்த உள்ளூரா ட்சி சபைத் தேர்தலில் சவகச்சேரி, பரு த்துறை நகர சபைகளை சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தே சிய மக்கள் முன்னணி (தமிழ்தேசிய பேரவை) கைப்பற்றியுள்ளது. 

இச் செய்தியை தேர்தல்கள் ஆணை க்குழு இன்னமும் உத்தியோக பூர்வ மாக தெரிவிக்கவில்லை என்பதுடன்  தேர்தல் நடவடிக்கைக்குழு அதிகாரி களை மேற்கோள் காட்டி எமது பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ள னர்.  பருத்துறை நகர சபையில் ஆறு வட்டாரங்களையும் சாவகச்சேரில் ஐந்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக பிர தேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவ் இரண்டு சபைகளையும் தமது முன்னணி கைப்பற்றியுள்ள தாக முன்னணியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை யாழ் மாநகர சபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாகவும் பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர். திரு கோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தமிழ்தேசியக் கூட்டமை ப்பு முன்னிலையில் உள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்து ள்ளனர்.