ஜனாதிபதி இராஜினாமாச் செய்ய வேண்டும் - விமல் வீரவன்ச.!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டிருக்கும் நிலைவரத்தை அடி ப்படையாகக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். அதன் மூலம் மக்களின் அபிப்பிராயத்தை அறிய முடியும். அல்லது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முடியும்.
எனினும் மக்களின் அபிப்பிராயத்தி ற்கு மதிப்பளிக்காது அரசாங்கம் பயணிக்க முற்படுமாயின் அப்பயண த்தை மாற்றுவதற்கான வழி எமக்குத் தெரியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் மக்களின் அபிப்பிராயத்தி ற்கு மதிப்பளிக்காது அரசாங்கம் பயணிக்க முற்படுமாயின் அப்பயண த்தை மாற்றுவதற்கான வழி எமக்குத் தெரியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மத்திய அரசாங்கத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகள் முன்னெடுத்த கொள்கைத்திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனவிற்கு அதிகளவிலான வாக்குகளை வழங்கியுள்ளனர்.
எனினும் அவ்வாணைக்கு பின்னரும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செல்ல முடியுமென நினைக்குமாயின் அது இன்னும் விளைவுகளை ஏற்படு த்தக் கூடியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரதமர் ஒருவரை நியமிக்குமாறும் அரசாங்கத்திற்கு நாம் எதிர்க்கட்சியிலிருந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிதோம்.
ஆயினும் எமது குறித்த வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாது தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைத்து விட்டதாக ஜனாதிபதிதான் குறிப்பிட்டார்.
எனினும் அவர் மீண்டும் அத்தரப்பிற்கு ஆட்சியை வழங்கி எஞ்சியுள்ள பொருளாதாரத்தையும் சீர்குலைப்தற்கு வழிவகுக்கவுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தத்தைக் கொண்டு வந்து காலம் பூராகவும் அதிகாரத்தில் இருப்பதற்கு எதிர்பார்ப்பதாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தினர்.
எனினும் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை விலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமரை விலக்குவது தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரியுள்ளார். அந்தளவிற்கு நாட்டின் ஆட்சி முறையை நல்லாட்சி அரசாங்கம் சிக்கலுக்குட்படுத்தியுள்ளது.
எனினும் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். அதன் மூலம் மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள முடியும். அல்லது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முடியும். ஆயினும் அவற்றை மேற்கொள்ளாது நாட்டை ஸ்திமற்ற நிலைக்கு கொண்டுசெல்கின்றனர்.
நாட்டின் பொருளதாதரம் நாளுக்கு நாள் வீழச்சி கண்டு செல்கிறது.
அத்துடன் எதிர்க்கட்சித தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமை வகிப்பதற்கான தார்மீகம் இல்லை. சட்ட ரீதியாகப் பார்தால் எதிர்க்கட்சித் தலைமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு கிடைக்க வேண்டும்.
அது தொடர்பில்கூட அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
ஆகவே அரசா ங்கம் மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிக்காது தான்தோன்றித் தனமாக பயணிக்குமாயின் அப்பயணத்தை திருப்புவதற்கான வழி தமக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.