Breaking News

அரசியல் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது !

தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து தனித்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அந்த முயற்சியை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகு வதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முன்தி னம் இரவு தீர்மானித்த போத லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு டன் நேற்று பகல் நடைபெற்ற விசேட மற்றும் அவசர சந்திப்பின்போது ஜனா திபதியின் வேண்டு கோளுக்கு இண ங்க தேசிய அரசாங்கத்தில் நீடிக்க தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற நிலை யில் பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் 12 மணிக்கு சுதந்திரக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். 

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நீண்டநேரம் கலந்துரையாடியிருந்தனர். அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த தயாசிறி ஜய சேகர டிலான் பெரெரா ஜோன் செனவிரட்ன நிமால் சிறிபால டி. சில்வா உள்ளி ட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அவசர சந்திப்பில் கலந்து கொண்டனர். 

இதன்போது தனித்து அரசாங்கம் அமைக்கும் செயற்பாட்டை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொ ண்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறி ப்பாக இந்த சந்திப்பில் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் எம்.பி. க்களுக்கு நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். 

குறிப்பாக பிரதமரை சட்டரீதியாக பதவியிலிருந்து நீக்குவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் தேசிய அரசாங்கம் பயணிக்கவேண்டியதன் அவசியம் என்பன குறித்து ஜனாதிபதி சுதந்திரக் கட்சி எம்.பி. க்களுக்கு விளக்கியுள்ளார். விசேடமாக சர்வதேச சவால்களை வெற்றிகொள்ள தேசிய அரசாங்கம் நீடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 

இதனையடுத்தே தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கான இணக்கப்பாடு எட்ட ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிந்தவுடன் வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அமைதி என்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதியை பலப்படுத்த தீர்மானித்ததாக தெரிவித்தார். 

இதன்மூலம் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையிலான தேசிய அரசா ங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளளனர். இதேவேளை தமது கட்சியிலு ள்ள உறுப்பினர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் சுதந்திரக் கட்சியின் தற்போது ஈடுபட ஆரம்பித்துள்ளனர். 

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்புடன் இணை ந்து அரசாங்கம் அமைக்குமாயின் தாம் அதில் இடம்பெறமாட்டோம் என சுத ந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்க ளான மஹிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுமார் 10 பாராளு மன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

அவ்வாறு சுதந்திரக்கட்சியானது மஹிந்த தரப்புடன் இணையுமானால் தாம் ஐக்கிய தேசியகட்சிக்கு செல்லும் முடிவில் இந்த எம்.பிக்கள் உள்ளதாக தெரி விக்கப்படுவதால் தற்போது சுதந்திரக்கட்சி பாரிய நெருக்கடியை எதிர்கொ ண்டிருந்த நிலையில் தற்போது குறுகிய காலத்துக்கு இவ்வாறு தேசிய அர சாங்கத்தில் நீடிப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி 113 எம்.பி.க்களை பெற்றுக்கொள்வதிலும் சிறிலங்கா சுதந்தி ரக்கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இப் பின்னணியில் தனித்து அரசாங்கம் அமைக்கும் முயற்சியை சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இந்நிலையில் நாளை, அல்லது நாளை மறுதினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதன்போது முக்கியத்து வம் மிக்க அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்போது சுதந்தி ரக்கட்சி அவதானம் செலுத்தியுள்ளது. 

சட்டம் ஒழுங்கு அமைச்சு, நிதி அமைச்சு போன்றவற்றை தம்மிடம் எடுத்து க்கொள்ளும் நோக்கில சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஆராய்ந்து வரு கின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நலையில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைக்க வேண்டுமானால் அக்கட்சியே பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறி வருகின்றது. 

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியானது இதுவரை 113என்ற பெரு ம்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதன்படி தேசிய அர சாங்கத்தில் நீடிப்பதற்கு சுதந்திரக் தீர்மானம் எடுத்துள்ளது. அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் சுதந்தி ரக் கட்சி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அரசா ங்கத்தை அமைத்தல் மற்றும் பெரும்பான்மையை நிரூபித்தல் போன்ற சர்ச்சைமிக்க விடயங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. மாறாக தற்போதைய அரசியல் நெரு க்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்ற சர்ச்சையே எழுப்ப ப்பட்டதுடன் பின்னர் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை விவாதம் நடை பெற்றது. 

 கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளியான முடிவுகளின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரம சிங்க பதவி வகிக்கின்ற அரசாங்கத்தில் தாம் இருக்கமாட்டோம் என்று சுதந்தி ரக் கட்சி தெரிவித்ததையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரி யிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் பிரதமர் பதவி விலகுவதற்கு மறுத்துவிட்ட நிலையில் இரண்டு கட்சி களும் தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெ டுத்து வந்தன. இதனிடையே கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சபாநாயகரையும் பிரதமரையும் சந்தித்து பேச்சு நடத்தினார். 

இந்த சந்திப்புக்களின்போது தேசிய அரசாங்கத்தை நீடித்துச் செல்ல இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கு வது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. எவ்வாறனெினும் தற்போது தற்காலிகமாக தேசிய அரசா ங்கத்தை நீடித்துச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.