இலங்கை உட்பட 16 நாட்டு கடற்படையினரை ஒன்றிணைத்து இந்தியா போர்ப் பயிற்சி.!
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள நிலையில், இந்தியா 16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரை இணைத்து பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
இப்பயிற்சியானது எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொட ர்ச்சியாக எட்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பை விரிவாக்குதல், முக்கிய கடல் பாதைகளில் சட்டவிரோத செயற்பாடுகளு க்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகிய இலக்குகளின் அடி ப்படையில் இக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மிலன் பயிற்சி' என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்த நடவடிக்கை, அந்த மான் நிக்கோபார் கடற்பகுதியில் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை, அவுஸ்திரேலியா, மலேசியா, மாலைதீவு, மொறிசியஸ், மியான்மார், நியூசிலாந்து, ஓமான், வியட்னாம், தாய்லாந்து, தன்சானியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, கம்போடியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்பெற்று வரும் நிலையிலேயே-அதற்கு எதிரான ஒரு நகர்வாகவே இந்தியா இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல், இராணுவ விமர்சகர்கள் கரு த்து வழங்கியுள்ளனர்.