Breaking News

இது குறித்து இப்­போது கலந்­து­ரை­யாட முடி­யாது - சம்பிக்க ரணவக்க.!

அர­சாங்­கத்தின் நெருக்­க­டி­களை கரு த்தில் கொண்டு அர­சியல் மறு­சீ­ர­மை ப்பு வேலைத்­திட்டம் ஒன்­றினை உட­ன­டி­யாக முன்­னெ­டுக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு அர­சியல் கூட்­டணி மீண்டும் கைகோர்க்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளதென அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி வித்துள்ளார்.

புதிய அர­சியல் அமைப்பு குறித்து கலந்­து­ரை­யாட இது பொருத்­த­மான நேர­மில்லையென குறிப்­பிட்­டுள்ளார். ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கையில் இவ்வாறு விவரித்தாா். 

மேலும் தெரிவிக்கையில்.....

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நிறை­வ­டைந்து இரண்டு வாரங்­க­ளுக்கு மேலான காலம் கடந்­துள்ள நிலையில் இப்­போ­துள்ள நிலை­மைகள் குறித்து கல்­வி­மான்கள், அர­சியல் நிபு­ணர்கள் அனை­வ­ரு­டனும் நாம் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் அடுத்த கட்டச் செயற்­பா­டுகள் குறி த்து எம்மால் அடை­யாளம் காண முடிந்­துள்­ளது. 

இப்­போது நடை­பெற்­றுள்ள தேர்தல் முடி­வு­களின் மூல­மாக நாட்டில் பல மாற்றுக் கருத்­துக்கள் எழுந்­துள்­ளன. அதேபோல் அடுத்து வர­வுள்ள மாகா­ண­சபை மற்றும் ஜனா­தி­பதி தேர்­தலில் போது மீண்டும் தேசிய அர­சாங்­க­மாக அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டுமென மக்கள் இத் தேர்­தலில் தெரி­வித்­து ள்­ளனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு அர­சியல் கூட்­டணி மீண்டும் ஒன்­றி­ணைய வேண்டும் என்­பதை மக்கள் இந்த தேர்­தலின் மூல­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் கிடைக்கும் வாக்­கு­களை பறி க்கும் சூழ்ச்­சிகள் இடம்­பெற்­றுள்­ளன. 

ஆகவே இப்­போது நாம் ஆயத்­த­மாகி பாரிய அர­சியல் வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். பொரு­ளா­தார, சமூல மாற்­றங்­களை ஏற்­ப­டு த்தும் அர­சியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். நடுத்­தர மக்­களை இலக்கு வைத்து நாம் எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். தண்ணீர் பிரச்­சினை உள்­ளது, காணி பிரச்­சி­னைகள் உள்­ளன. 

இவற்­றினை நாம் இனங்­கண்டு செயற்­பட வேண்டும். கல்­வித்­து­றையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். சைட்டம் சிக்­கல்கள் போன்­ற­வற்றுக்கு முழு­மை­யாக தீர்வு காண வேண்டும். நடுத்­தர, அடி­மட்ட மக்­களின் பொரு­ளா­தார செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­தாது நிலை­யான பொரு­ளா­தார தன்மை ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வதில் எந்­தப்­ப­யனும் இல்லை. 

தேர்தல் முறைமை குறித்து கருத்திற் கொள்ள வேண்டும். அடுத்து நடை­பெறும் தேர்­த­லுக்கு முன்னர் தேர்தல் முறை­மையில் உள்ள குழப்­பங்­களை மாற்­றி­ய­மைக்க வேண்டும். அர­சியல் அமைப்பு மறு­சீ­ர­மைப்பு குறித்து நாம் இப்­போது கலந்­து­ரை­யாட முடி­யாது. அர­சியல் அமைப்பு குறித்து கலந்­து­ரை­யாடும் நேரம் இது­வல்ல. 

அனைத்து தரப்பும் ஏற்­றுக்­கொள்ளும் அர­சியல் அமைப்பு திருத்தம் அவ­சியம். எனினும் அதனை இப்­போ­துள்ள நிலையில் எம்மால் முன்­னெ­டுக்க முடி­யாது. ஆகவே இப்­போ­துள்ள நிலை­மையில் அர­சியல் அமைப்பு மறு­சீ­ர­மைப்பு அவ­சி­ய­மற்ற ஒன்­றாகும். அர­சாங்கம் பல­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

இதில் குறு­கிய மற்றும் நீண்­ட­கால வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். அதேபோல் சூழ­லியல் பிரச்­சி­னை­களை உட­ன­டி­யாக நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும். பிர­தான இர ண்டு கட்­சி­களின் இளம் அர­சியல்வா திகள் மத்­தியில் இவ் விட­யங்­களை ஒப்­ப­டைக்க வேண்டும். 

அர­சாங்கம் என்ற வகையில் எமக்கு சரி­யான வேலைத்­திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அதற்­கான ஜனா­தி­ப­தி-­பி­ர­தமர் தலையீட்டில் புதிய வேலைத்திட்ட ங்கள் அவசியம். புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க தாமதமாகும் நிலையில் நாம் தலையிட்டு மாற்றங்களை முன்னெடுக்க முன்வருவோம். 

எவ்வாறு இருப்பினும் சரியான நகர்வுகளையே மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆகவே அதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமெனத் தெரிவித்துள்ளார்.