Breaking News

சில தினங்­களில் பாரிய மாற்­றங்கள் - ஜனாதிபதி

வெளி­வந்­துள்ள உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முடி­வு­களை அடுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று அவ­ச­ர­மாக சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன் தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை நிகழ்த்து­வ­தாக தெரிவித்துள்ளார். 


நேற்­றைய தினம் வெளி மாவட்­டங்­க­ளில் இருந்த சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கொழும்­புக்கு வர­ழைத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்தல் முடி­வுகள் மற்றும் அதற்கு அடுத்­தக்­கட்ட நகர்­வுகள் எதிர்­கால திட்­டங்கள் குறித்து விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நடை­பெற்ற இச் சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான சுசில் பிரேம்­ஜ­யந்த அனர பிரி­ய­தர்­ஷன யாப்பா நிமால் சிறி­பால டி. சில்வா ஜோன் சென­வி­ரட்ன உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டி­ருந்த நிலையில் பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. 

குறிப்­பாக இதன்­போது உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய சில நாட்­களில் பாரிய மாற்­றங்­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­ட­தாக கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார். 

இதன்­போது ஒரு சில எம்.பி. சுதந்­திரக் கட்சி தொடர்ந்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்­க­வேண்டும் என்று கூறி­ய­துடன் மேலும் சில எம்.பி. க்கள் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவை இணைத்­துக்­கொண்டு பய­ணிக்­க­வேண்டுமென தெரிவித்துள்ளார். குறிப்­பிட்­டுள்­ளனர். 

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்­தின்­போது ஒரு சிலர் குறிப்­பிட்­டுள்­ளனர். எவ்­வா­றெ­னினும் தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­ப­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ள ரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரிவித்துள்ளாா. 

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அமோக வெற்­றி­யீட்­டி­ய­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்திரக் கட்சியும் தோல்வியை சந்தித்துள்ளன. 

சுதந்திரக் கட்சியானது நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்துள்ளதையடுத்தே நேற்று ஜனாதிபதி அவசரமாக சுதந்தி ரக் கட்சி அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.