Breaking News

நல்­லாட்சி அர­சாங்கம் 2020 வரை தொடரும்

2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­ சிங்க தெரி­வித்­துள்ளார். உள்­ளூ­ராட்சிமன்ற  தேர்தல் முடி­வு­களை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­ய க்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று அல­ரி­மா­ளி­கையில் ஆலோ­சனை நடத்­தியபோது பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். தேர்தல் முடி­வுகள் தேசிய அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யுள்ள செய்­தியை அவ­தா­னத்தில் எடுத்­துக்­கொண்டு எதிர்­வரும் நாட்­களில் சில­பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான முடி­வு­களை மேற்கொள்ளலாம். 

ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு பத­விக்­காலம் பூர்த்தி ஆகும்வரை முன்னோக்கிச் செல்வோமென பிரதமர் தெரிவித்துள்ளார்.