Breaking News

இலங்­கை­யுடன் ஒப்­பந்­தத்­திற்கு ஆயத்தமாகும் தாய்­லாந்து.!

இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட எதி ர்­பார்த்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள தாய் ­லாந்து அர­சாங்கம் பாரா­ளு­மன்­ற த்தில் அதற்­காக சிறப்பு அனு­மதி பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்க ப்பட்டுள்ளன. 

மேலும் தாய்­லாந்தின் வர்த்­தக செயற்­பாட்டு பிரிவின் நிறை­வேற்று இயக்­குநர் ஒரமன் சப்­த­வீதும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இலங்­கையை தாய்­லாந்­து­ட­னான தெற்­கா­சி­யாவின் வர்த்­தக பங்­கா­ளி­யாக மாற்றும் நோக்கில் இலங்­கை­யுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட எதிர்­பார்த்­துள்ளோம்.

இலங்­கை­யா­னது தெற்­கா­சி­யாவில் குறிப்­பி­டளவு சந்தை வாய்ப்­பை கொண்­டுள்­ளது. அத்­தோடு கடந்த ஐந்து வரு­ட­கா­லப்­ப­கு­தியில் சரா­ச­ரி­யாக 6.5 சத­வீதம் என்ற ஆரோக்­கி­ய­மான பொரு­ளா­தார வளர்ச்­சி­யை பதிவாக்கியுள்ளது.

இந்­தியா, பாகிஸ்தான் போன்ற தெற்­கா­சிய நாடு­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளது. தாய்­லாந்தின் வர்த்­தக செயற்­பாட்டு பிரிவின் வல்­லு­நர்கள் இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் தொடர்பில் முழு­மை­யான ஆய்­வை நிறை­வு ­செய்­துள்­ளனர். 

ஆனாலும் இலங்­கை­யுடன் இவ்­ ஒப்­பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முன்னர் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்து ள்ளனர்.