ஜெனிவாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதி நிதிகள் உரையாற்றவுள்ளனா்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனி வாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இலங்கை விவகார விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனா்.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் பிரதிதிகள் அரச சார்பற்ற நிறுவன ங்கள் என்பன பல்வேறு தரப்பினர் இம்முறை ஜெனிவா கூட்டத் தொட ரில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலை நாட்டப்படாமை தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளடங்கிய கொண்ட ஐந்துபேர் கொண்ட குழு ஜெனிவா நோக்கி செல்லவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமை ப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே, இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பாக எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் ஜெனிவா வளாகத்தில் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் இம்முறை ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளனர்.
குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் இம்முறை ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளனா்.
இதேவேளை, வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரனும் வழமைபோன்று இம்முறையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு காணா மல் போன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த உள்ளாா்.
பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரச சார்பற்ற மக்கள் பிரதி நிதிகள் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதுடன் சர்வதேச ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இது இவ்வாறிருக்க தென்னிலங்கையின் ""எலிய"" அமைப்பின் பிரதிநிதியான முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பிரசாரம் நடாத்தவுள்ளாா்.
அதாவது இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் செயிட் அல் ஹுசைன் கூறுகின்ற அனைத்தையும் அரசாங்கம் கேட்பதாகவும் அவர் ஜெனிவாவில் எடுத்துக் கூறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தரப்பு தாம் எவ்வாறு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதுடன் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தவு ள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு ஜெனிவா செல்லவுள்ளது. அதேபோன்று வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர்.
அதேபோன்று, சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக பல்வேறு விடயங்களை வலியுறுத்தவுள்ளது.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இலங்கை தொடர்பாக உரைகளை நிகழ்த்தவுள்ளனர். குறிப்பாக இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வேண்டுமென்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டுமென்றும் சர்வதேச சமூகம் வலியுறுத்தவுள்ளது.
மார்ச் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவா தம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனி வாப் பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதமும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று 14 க்கும் மேற்பட்ட உபகுழுக்கூட்டங்களும் ஜெனிவா வளாக த்தில் இம்முறை கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளன.
இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொட ரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிரு ந்தது.
அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது.