விசேட குழுவின் அறிக்கை இன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்.!
தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறி த்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வும் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை இன்று பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவு கள் வெளிவந்த பின்னர் தேசிய அரசா ங்கத்தின் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. இதன் பிரகாரம் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் களமிறங்கின.
இவ் விடயம் தொடர்பாக இரு பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இடைக்கிடையே பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டது. இதனால் அரசியல் ரீதியாக பாரிய சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்றும் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய அரசாங்கத்தை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்க வேண்டிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தயாரிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறு
சீரமைப்பு நடவடிக்கை குறித்து ஆராயும் பொருட்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் அமைச்சர்களான அகிலவிராஜ் காரியவசம், ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான அஜித் பீ பெரேரா, ருவன் விஜேவர்தன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன்சார் திட்டங்கள் மற்றும் வெற்றிகரமாக அரசாங்கத்தை கொண்டு செல்வது தொடர்பான புதிய வேலைத்திட்டங்கள் கொண்ட அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்தக் குழுவிற்கு கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை திங்கட்கி ழமை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.