இந்தியாவை விட்டு சீனாவை நாட வேண்டிய காரணத்தை வெளிப்படுத்திய - மஹிந்த
இலங்கையில் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனாவை நாட வேண்டியேற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தை முடி த்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் பெங்களூருவில் வைத்தே ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைக்கும் வேலை த்திட்டத்தை முன்னெடுக்குமாறு இந்தியாவிடம் வேண்டிக்கொண்டோம். எனினும் இந்திய அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறிருந்தபோதும் அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா இருந்தது.
எனினும் நாம் குறித்த வேண்டுகோளை யுத்த காலத்திலேயே முன்வைத்திருந்தோம். அதனால் இந்திய அரசாங்கம் அதனை நிராகரித்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆகவே குறித்த செயற்றிட்டத்தை நாம் சீனாவிடம் முன்வைத்தோம். அந்த யோசனை தொடர்பில் சீனா உடனடி நடவடிக்கைக்குத் தயாரானது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி எமக்கு நன்கு தெரி யும். அதனாலேயே அத்துறைமுகப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தயாரா னோம். நாட்டை பிரதானமாகக் கொண்டு நடவடிக்கை எடுப்பதே சிறந்த தலைவரின் தலையாய கடமையாகும்.
எனினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பனை செய்கிறது. தனியார் மயமாக்கலுக்கு எதிரானதாகவே எமது கொள்கை இருந்தது. தனியார் மயமாக்கல் மூலம் நாட்டை கட்யெழுப்ப முடி யுமென நாம் எதிர்பார்க்கவில்லை.
இலங்கை, இந்தியாவுடன் சிறந்த உற வைப் பேணி வந்தது. எனினும் கடந்த காலங்களில் எமக்கும் இந்தியாவிற்குமிடையில் தவறான புரிதல்கள் ஏற்பட்டிருந்தன.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் பெருவெற்றி பெற்றுள்ளோம். அதன் மூலம் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
அத்துடன் குறித்த தேர்தலை நாம் உள்ளூர் அதிகார சபைகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் தேர்தலாகக் கருதவில்லை. தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஆணையாகவே எண்ணுகின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால வேலைத்திட்டங்களுக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலூடாக எதிர்ப்பினைத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளாா்.