நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றாரா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி!
நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றாரா என முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று க்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது...
நாட்டின் ஜனாதிபதி பற்றி பேசுவதற்கு சோர்வாக உள்ளது. நாட்டில் தற்போது ஜனாதிபதி இருக்கின்றாரா என்பதே தெரியவில்லை. முடிந்தால் இந்த அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்திக் காண்பிக்கட்டும். நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
பலர் என்னுடைய குடியுரிமை பற்றி பேசினாலும் நான் எனது வெளிநாட்டு குடி யுரிமையை ரத்துச் செய்து கொண்டுள்ளேன். கள்வர்களை பிடிக்கும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சட்டம் ஒழுங்கு அமை ச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளிக்கொணரப்படாது. நாட்டின் சட்டம் ஒழுங்குத்துறைக்கு கடவுளின் துணை மட்டுமே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டியிருந்தனர். எதிர்காலத்திலும் மக்கள் சரியான பாட ங்களை இந்த அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள் என கீதா குமாரசிங்க தெரி வித்துள்ளார்.