Breaking News

சங்கீதா, கனிரதனுக்கு ஆதரவாக முஸ்லிம் அமைச்சர் - ரிஷாட் பதியுதீன்.!

சிறையில் வாடும் சுதாகரனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தாயை இழந்த துயரத்திலும், ஏக்கத்தி லும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனை க் கருத்திற் கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. 

இவ் விடயமாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கடந்த யுத்த காலத்தின் போது, அரசுக்கெதிராக ஆயு தம் தூக்கிப் போராடியவர்கள் மாத்திரமின்றி, எதுவுமே அறியாமல் தப்பு செய்த வர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்னா்.

யுத்த முடிவுக்குப் பின்னர் சமாதானம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் விடு தலைப் புலி உறுப்பினர்களின் பெரும்பானமையானவர்களை அரசு பொது மன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அவர்கள் தற்போது தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்து, சமூகத்தின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரும், ஏதோ சில காரணங்களுக்காக கடந்த பத்து வருடங்களாக சிறை யில் வாடிக் கொண்டிருக்கின்றாா்.  

அவரது மனைவி யோகராணி தற்போது இறந்து விட்ட நிலையில், எதுவும் அறியாத 09 வயதுடைய ஆண் பிள்ளையும், 11 வயதான பெண் பிள்ளையும் தாயை இழந்தும், தந்தையுமின்றி நிா்கதியாகியுள்ளனர். 

எனவே, இக் குழ ந்தைகளின் நிலைமையை  கருதி, அவர்களது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் விவரிக்கப் பட்டுள்ளது.