4ஆம் திகதி விவாதிக்க ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்.!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொட ர்பில் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தொடர்ந்து அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றன.
எதிர்வரும் 4ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படவுள்ள நிலை யில் அன்றைய தினம் என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பிலேயே தற்போது தேசிய அரசியலில் பரவலாக விவாதிக்கப்பட்டவாறு உள்ளது.
ஐக்கியதேசியக்கட்சியினர் தாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றியடைவோம் என மிகவும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
அதாவது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ஐக்கியதேசியக்கட்சியானது அரசியலில் ஒரு நிலையான திருப்புமுனையை அடையும் என மிகவும் உறுதியான முறையில் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தவாறு உள்ளனா்.
அத்துடன் தமக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரின் ஒரு பிரிவினரதும் ஆதரவு கிடைப்பது உறுதி என்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிகொள்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனா்.
மறுபுறம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியானது இந்த முயற்சியில் தாம் பாரிய வெற்றியை அடைவோம் என தெரிவித்து வருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கியதேசியக்கட்சிக்குள்ளேயே அதிகமானனோரின் ஆதரவு கிடைக்குமென கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனா்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி இதுவரை உத்தியோகப்பூர்வமான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எப்படியிருப்பினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையி ல்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது சுதந்திரக்கட்சியினர் இரண்டாக பிளவுபடும் அபாயம் காணப்படுவதாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் திருப்புமுனையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டப்பைபானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடி தீர்மானிக்கவுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் என ஐக்கியதேசியக்கட்சி நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் அதுதொடர்பான இராஜதந்திர நகர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கியதேசியக்கட்சியும் கூட்டு எதிரணியும் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தில் ஐக்கியதேசியக்கட்சிக்கு 107 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்ஷவும் அத்துரலிய ரத்தின தேரரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை.
அதேபோன்று இந்த ஐக்கியதேசியக்கட்சி வசமுள்ள 107 எம்.பி.க்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களும் இடம்பெறுகின்றனர்.
மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் 95 எம்.பி.க்கள் உள்னர். அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் 42 எம்.பி.க்கள் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் 16 எம்.பி.க்களும் ஜே.வி.பி. வசம் 6 எம்.பி.க்களும் உள்ளனர்.
அதேபோன்று ஈ.பி.டி.பி. வசம் ஒரு எம்.பி. பதவியும் உள்ளமை குறிப்பிடத்த க்கது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் எதிர்வரும் நான்காம் திகதிக்கான விவாதத்தில் பங்கேற்பதற்கு ஆயத்தமாகியுள்ளனா்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பானது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் என ஐக்கியதேசியக்கட்சி நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் அதுதொடர்பான இராஜதந்திர நகர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கியதேசியக்கட்சியும் கூட்டு எதிரணியும் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தில் ஐக்கியதேசியக்கட்சிக்கு 107 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாஸ ராஜபக்ஷவும் அத்துரலிய ரத்தின தேரரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது குறித்து இதுவரை வெளிப்படுத்தவில்லை.
அதேபோன்று இந்த ஐக்கியதேசியக்கட்சி வசமுள்ள 107 எம்.பி.க்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 உறுப்பினர்களும் இடம்பெறுகின்றனர்.
மறுபுறம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் 95 எம்.பி.க்கள் உள்னர். அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் 42 எம்.பி.க்கள் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் 16 எம்.பி.க்களும் ஜே.வி.பி. வசம் 6 எம்.பி.க்களும் உள்ளனர்.
அதேபோன்று ஈ.பி.டி.பி. வசம் ஒரு எம்.பி. பதவியும் உள்ளமை குறிப்பிடத்த க்கது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் எதிர்வரும் நான்காம் திகதிக்கான விவாதத்தில் பங்கேற்பதற்கு ஆயத்தமாகியுள்ளனா்.