Breaking News

இலங்கை விடயமாக முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிக்கொணர இரு தரப்பினரும் தயார் நிலையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனி வாவில் நடைபெற்று வரும் இந் நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இல ங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறி த்த விவாதம் இடம்பெறவுள்ளது. 

பரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பி னரும் ஜெனிவாவில் முகாம் இட்டு ள்ள நிலையிலும் இலங்கை தொட ர்பான முதலாவது விவாதம் இன்று நடைபெறுகிறது. ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இல ங்கை தொடர்பில் இடம்பெறவுள்ள நிலையிலேயே முதலாவது விவா தம் இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருடகால நீடிப்புக்கு உள்ளாகிய இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை அடிப்படையா கக்கொண்டே இன்றைய விவாதம் நடைபெறவுள்ளது. 

ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது. அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் ஜெனிவாவில் நிறை வேற்றப்பட்டது. 

அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரி ந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறை வேற்றப்பட்டிருந்தன. அதன்படி அப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியே விவாதம் நடைபெற்றது.

இதன்போது மனித உரிமை பேரவை சார்பில் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ள துடன் சர்வதேச நாடுகளின் பிரதி நிதிகளும் சர்வதேச அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இலங்கை அரசாங்கத்தின் பிரதி நிதிகளும் இன்றைய தினம் இந்த அமர்வில் உரையாற்றவுள்ளனா். 

இன்று விவாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜெனி வாவில் முகாமிட்டுள்ள அரசாங்கத் தரப்பு, பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் சர்வ தேச தரப்பு என்பன இன்றைய தினம் தமது நிலைப்பாடுகளை வெளியிட தயா ராகியுள்ளன. 

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பூகோள கால க்கிரம மீளாய்வு தொடர்பான அமர்வில் இலங்கை குறித்து நிறைவேற்றப்ப ட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறி முறையை உருவாக்க வேண்டும். 

அத்துடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமிக்க வேண்டும். 

(தற்போது ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) அந்த அலுவலகத்துக்குத் தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதி காரிகளும் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெளியி டப்பட வேண்டும். 

காணாமல் போதல்கள் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொட ர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவி னர்களுக்கு வழங்குங்கள். 

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உதவிகளைப் பெற வேண்டும். அத்துடன் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். (இந்த பரிந்து ரையை அமெரிக்கா முன்வைத்திருந்தது) சர்வதேச உதவியுடன் நம்பகரமான பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறி முறையை முன்னெடுக்க வேண்டும். 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமிக்க வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழ க்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவது டன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில் முன்வை க்கப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்பு க்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்ட வேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் பிரேரணை ஒன்று நிறை வேற்றப்பட்டது. 

அப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது. கடந்த 26 ஆம் திகதிஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும்23 ஆம் திகதியுடன் நிறைவடையவு ள்ளது.