இவர் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா? மனமுருகிய வைகோ!
மறைந்த நடராஜன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருந்தால் தமிழீழம் எப்போதோ மலர்ந்திருக்கும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராம ச்சந்திரன் உயிரோடு இருந்திருந் தாலோ, அல்லது மறைந்த நடராஜன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருந் தாலோ இது கண்டிப்பாக நடந்திருக்கு மென அவர் நம்பிக்கை வெளியிட்டு ள்ளார்.
மறைந்த ம. நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தின் சார்பில், தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைகோ மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “நினைத்து பார் க்க முடியாத, வெளியுலகிற்கு தெரியாத பல சாதனைகளை நடராஜன் செய் துள்ளார்” என்றார்.
“அ.தி.மு.கவுடன் நான் கூட்டணி வைக்க நடராஜனே காரணம். அவர் எந்த அதி காரப் பொறுப்பிற்கும் வரவில்லை. நடராஜன் அதிகாரத்திற்கு வந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும். மேலும், எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தாலும் அது நடந்திருக்கும். துரதிஸ்டவசமாக இருவரும் இன்று உயிரோடு இல்லை. நடராஜனின் பெயர் எப்போதும் நினைவு கூரப்படும்” எனத் தெரிவித்துள்ளாா்.